Posts

Showing posts with the label HISTORY

பாண்டியர் வரலாறு Pandyar History

Image
பாண்டியர் வரலாறு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது. பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. இவர்களது சின்னம் மீன். இவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது. சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவன் நெடுஞ்செழியன். முதல் தமிழ் தங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர். இடை சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்

God Shivan History In Tamil; சிவபெருமானின் வரலாறு

Image
சிவன்; இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளில் ஒருவர். சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகும். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். இவர் தனது ஒரு பகுதியில் இருந்து அன்னை பராசக்தி உருவாக்கினார். பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார். தனது உடுக்கையில் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார். பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்ம தேவரையும், அதன் பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார். கடவுள்களின் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். சிவனின் இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவும், வலப்புறத்தில் இருந்து பிரம்மரும் உருவானார்கள். என்று திருமாலின் அவதாரங்களின் ஒருவரான வேதவியாசர் கூறுகிறார். பிரம்மன் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாக உருத்திரன் உதித்தார் என்று வாயுபுராணம் கூறுகின்றது. சிவனின் வேறு பெ

கூல் கேப்டனின் தூள் வரலாறு – மகேந்திர சிங் தோனி

Image
மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார். இளம் வயதில் டோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்! பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தார் டோனி . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் டோனியை அவரது நண்பர்கள் கீப்பிங் செய்ய சொன்னார்கள். அப்போது கிரிக்கெட் விளையாடிய தோனிக்கு கால்பந்தை விட கிரிக்கெட் சிறப்பான விளையாட்டாக தோன்றியது. அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம்.இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன். டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்பா உடற்பயிற்சி

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war

Image
நமது உலக வரலாற்றிற்கான தேடுதல் கல்வி சாலைகளோடு பெரும்பாலனவர்களுக்கு முடிந்து விடுகிறது. பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் உலகச் செய்திகளை அறிதல் நிறைவடைந்து விடும். சமீபகாலமாக நமது பணப்பைக்கு பத்திய சிகிச்சை அளித்து வரும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் சர்வதேச எண்ணெய் நிலவரங்களை சிறிது அறிந்து கொள்வோம். அமெரிக்கா – ஈரானுடைய அணு ஆயுத ஒப்பந்தம், வெனிசுலா நாட்டின் பண வீக்கம் போன்ற ஏனைய காரணங்கள் கூட நமது எரிவாயு விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு நாட்டின் இன்றைய பிரச்சினைகளை நாம் ஆராய்ந்தால் அது நிச்சயம் வரலாற்று தொடர்புடையதாக இருக்கும். மன்னராட்சி முடிவு உலக வரலாற்றையும், வழித்தோன்றல்கள்களையும் நாம் அறிதல் மூலம் தற்பொழுதைய உலகளாவிய பார்வையை அகலப்படுத்திக் கொள்ள முடியும். நாடுகளில் மன்னராட்சி முடிவிற்கு வந்த தருணங்கள், சர்வதேச எல்லைகளில் உருவான மாற்றங்கள், வர்த்தக பொருட்களின் பரஸ்பர பரிமாற்றங்கள் போன்றவற்றை ஓரளவு அறிதல் மூலம் ஒவ்வொரு நாட்டின் தற்போதைய நிலைப்பாடுகளையும், மாற்றங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கானதொரு நல்ல தொடக்கம் முதலாம் உலகப் போரின்

இரண்டாம் உலகப்போர் பற்றிய உண்மைகள் facts about 2nd world war in tamil

Image
  போர் என்பது ஒட்டுமொத்த மனித குல வரலாற்றின் சில கருப்பு பக்கங்களாக உள்ளது. ஆனபோதிலும் அதே போர் அழிவினை மட்டுமல்லாமல் மாற்றங்களையும் உண்டாக்க வல்லதாய் உள்ளது. அப்படி உலகையே புரட்டிப் போட்ட சில போர்களில் முதன்மையானது இரண்டாம் உலகப்போர். ஏறத்தாழ 6 ஆண்டுகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உலகில் அன்றிருந்த அத்தனை அரசாங்கங்களும் பங்கு பெற்று நடத்திய அந்த யுத்தத்தினால் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் வீரர்கள் நேரடி யுத்தத்திலும், 2 கோடி அளவிலான மக்கள் போரின் விளைவினால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் நோயினாலும் மடிந்தனர். இதன் தாக்கம் பல தசாப்தங்களை கடந்தும் உலகில் நின்றது. போரின் ஆரம்ப புள்ளி  போரின் ஆரம்ப புள்ளி ஜெர்மனி போலந்து நாட்டின் மீது தொடுத்த தாக்குதலின் மூலம் தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாடாக போரில் இறங்கத் தொடங்கின. அவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பிரிவாக பிரிந்து போரை நடத்தின. அச்சு நாடுகளின் பிரிவில் ஜெர்மனியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் தலைமையில் இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த கூட்டணியில் முன்னிலையில் இருந்தன. நேசநாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதலில் இந்

கர்த்தர் பணக்கார நாடாக உருவானது எப்படி…? quatar history in tamil

Image
இந்த கர்த்தா நாடு முன்னொரு காலத்தில் தொழில்நுட்பத்திலும் மற்றும் அமைப்பிலும் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்தது. இப்படி இருந்த நாடு எப்படி இன்று மிகப்பெரிய பணக்கார நாடாக கருதப்படுகிறது என்று இந்த பத்தியில் நாம் பார்ப்போம். கர்த்தர் நாடு தோற்றம் இந்த கர்த்தர் நாடு 1922 இது ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம் மக்களை கொண்டுள்ளது. 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் யாரும் வாழாத நிலையில் அங்கு உள்ள கடற்கரையில் மீனவர்கள் முத்து சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டனர். இங்கே இருக்கும் பெரும்பாலான மக்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்த நாடோடி மக்கள் அவர்கள், கர்த்தர் நாட்டின் கஜானா இருபதாம் நூற்றாண்டில் தான் கர்த்தர் நாட்டின் கஜானா மிகவும் செழிப்பான நிலையை அடைந்தது. அந்த நாட்டின் குடிமக்கள் மிகவும் செல்வமிக்க மக்களாக மாறினார். கர்த்தர் நாட்டில் வான் உயர்ந்த கட்டிடங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றை உருவாக்கினர். புவியில் மிகவும் பணக்கார நாடாக கருத இந்த கர்த்தா நாடு பற்றிய மருமத்தை பிவிசி அலசியது. எண்ணெய் வளங்கள் 1939 ம் ஆண்டில் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கர்த்தர் தன் நாட்டில் கருப