Posts

Showing posts with the label Mysteries

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war

Image
நமது உலக வரலாற்றிற்கான தேடுதல் கல்வி சாலைகளோடு பெரும்பாலனவர்களுக்கு முடிந்து விடுகிறது. பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் உலகச் செய்திகளை அறிதல் நிறைவடைந்து விடும். சமீபகாலமாக நமது பணப்பைக்கு பத்திய சிகிச்சை அளித்து வரும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் சர்வதேச எண்ணெய் நிலவரங்களை சிறிது அறிந்து கொள்வோம். அமெரிக்கா – ஈரானுடைய அணு ஆயுத ஒப்பந்தம், வெனிசுலா நாட்டின் பண வீக்கம் போன்ற ஏனைய காரணங்கள் கூட நமது எரிவாயு விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு நாட்டின் இன்றைய பிரச்சினைகளை நாம் ஆராய்ந்தால் அது நிச்சயம் வரலாற்று தொடர்புடையதாக இருக்கும். மன்னராட்சி முடிவு உலக வரலாற்றையும், வழித்தோன்றல்கள்களையும் நாம் அறிதல் மூலம் தற்பொழுதைய உலகளாவிய பார்வையை அகலப்படுத்திக் கொள்ள முடியும். நாடுகளில் மன்னராட்சி முடிவிற்கு வந்த தருணங்கள், சர்வதேச எல்லைகளில் உருவான மாற்றங்கள், வர்த்தக பொருட்களின் பரஸ்பர பரிமாற்றங்கள் போன்றவற்றை ஓரளவு அறிதல் மூலம் ஒவ்வொரு நாட்டின் தற்போதைய நிலைப்பாடுகளையும், மாற்றங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கானதொரு நல்ல தொடக்கம் முதலாம் உலகப் போரின்

எகிப்து நாட்டை பற்றிய ஆச்சரியமான விடயங்கள் top facts about egypt in tamil

Image
  எகிப்து நாடு பற்றிய உண்மைகள் வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் பிரமீடுகளுக்கும் பதபடுத்தபட்ட பிணங்களாகிய ம்மமிகளுக்கும் புகழ்பெற்ற நாடான மற்றும்  பண்டைய நாகரிகங்களில் மிகவும் சிறப்புபெற்ற  ஒரு  நாடுதான்  எகிப்து இந்த எகிப்து பற்றிய(facts about egypt) பல்வேறு மர்மமான மற்றும் ஆச்சரியமான உண்மைகள் பற்றி காணலாம். எகிப்து நிலப்பகுதி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியவிற்கு இடையெ உள்ள நாடுதான் இந்த எகிப்து உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இடத்தில் 15- வது இடத்தில் உள்ளது,இங்கு வாழும் மக்களில் 90% பேர் இஸ்லாமியர்கள்தான் இந்த எகிப்து நாட்டின் தலைநகரம்  கைரோ  இது உலகின் பழமையான தலைநகரங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது.  இந்த நாட்டில் வசிக்கூடிய மக்கள் பெரும்பாலும் நைல் நதிக்கரையிலே வசித்து வருகின்றனர் ஆம் கிட்டதட்ட 80% மேலானோர் எகிப்தின் வெறும் 5% நிலப்பகுதியிலேயே வசித்துவருகின்றனர் மிச்சமுள்ள நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. எகிப்து மக்கள் பண்டைய கால எகிப்திய மக்கள் கண்ணில் மை இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் ஆண்களும் சரி பெண்களும் சரி மை இடுவது வழக்கம் இதற்கான காரணம் இவர்கள் பாலைவன பகுதிகளில்

கடல் நகரம் அட்லாண்டிஸ் இருந்தது உண்மையா mystery of atlantis in tamil

Image
  mystery of atlantis பண்டைய காலம் முதல் இன்றைய நாள் நாம் இதுவரை நிறைய நகரங்களை பார்த்திருப்போம் அதைபற்றி கேள்விபட்டிருப்போம் ஆனால் நம்மால் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மர்மம் நிறைந்த கடலுக்கு அடியில் காணப்படும்  நகரம் தான் இந்த  அட்லாண்டிஸ் இந்த நகரத்தை பற்றிய வியப்பூட்டும் தகவல்களை இந்த பதிவில் காண்போம். அட்லாண்டிஸ் கண்டுபிடிப்பு இந்த அட்லாண்டிஸ் நகரை பற்றி முதன்முதலில்  2300  ஆண்டுகளுக்கு முன்பு    பிளேடோ  என்ற கிரேக்க தத்துவியலாளர் ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகிறார் . இந்த நகரத்தில் மனிதர்களும் கடவுள்களும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்றும் உலகின் மிகப்பெரிய செல்வமிக்க நகரமாகவும் இருந்தது என்றும்  குறிப்பிடுகிறார் .  இந்த நகரம் பல மர்மங்களை கொண்டி இருப்பதாக கூறப்படுகிறது யார் இந்த பிளேடோ இந்த பிளேடோ என்பவர் கிட்டதட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய தத்துவியலாளர்  இவருடைய பாட்டானார்தான் இவருக்கு முதன்முதலில் இந்த அட்லாண்டிஸ் நகரம் பற்றி  கூறுகிறார்  அவருடைய பாட்டனார் எகிப்து நோக்கி பயணத்தை மேற்கொண்ட பொழுது அப்பொழுது ஒரு மனிதர்தான் இவ

குமரிகண்டம் இருந்ததா உண்மை என்ன? unknown facts about kumarikandam in tamil

Image
  குமரிகண்டத்தின் வரலாறு(UNKNOWN FACTS ABOUT KUMARIKANDAM) குமரிகண்டம் கிட்டதட்ட 20,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகம் மற்றும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை ஒன்றினைக்கும் வகையில் இருந்த ஒரு மிகப்பெரிய கண்டம் என்றும் இங்குதான் மனித இனம் தோன்றியது என்றும் பெரும்பாலானோரால் நம்பபடுகிறது. அதுமட்டுமின்றி தமிழ் மொழியும் பிறந்தது என்று கூறப்படுகிறது. இந்த லெமூரியா கண்டம் பற்றிய சில வியப்பான தகவல்களை இந்த பதிவில் காண்போம். குமரிகண்டம் தோற்றம் இந்த குமரிகண்டம் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தீபகற்ப கண்டம் என்று கூறப்படுகிறது. இது தற்போது கடலுக்கு அடியில் இருப்பதாகவும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்  ஆனால் இன்றுவரை இந்த தமிழ்கண்டம் இருப்பந்ததற்கான எந்த ஆதாரங்களும் கடல் ஆராய்ச்சியில்  கிடைக்கப்படவில்லை , ஆனால் எழுத்துபூர்வமான ஆதாரங்கள் நிறைய உள்ளன நம் தமிழ் மொழியின் பழம்பெரும் நூல்களான தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்றவற்றில் இந்த இலெமூரியா பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. குமரிகண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இந்த குமரிகண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்து